Home Blog Page 92

Nearly half of all children in the world ‘live in poverty’

1

Sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.

நிலைக்கண்ணாடி

0

தமிழ் இலக்கியச் சூழலை சிலாகித்தல் என்கிற பெயரில் புகழ்பாடிக் கெடுப்பதற்கு ஆயிரங்கைகள் கொண்ட கார்த்தவீர்ய அர்ஜூனனாய் பெரும்பான்மையான எழுத்தாளர்களும், கவிஞர்களும் புகழ்பாடிக் கொன்று வருகின்றனர், பத்திரிக்கைகளோ மற்ற ஊடகங்களோ கேட்கவே வேண்டாம். இங்கே வெளியாகும் செய்திகளை விட வெளியாக்காத செய்திகளுக்கு தான் மதிப்பு அதிகம். ஆனால் நிலைக்கண்ணாடி வேறு எந்த கோணத்திலும் செய்திகளைச் சொல்லாது, அது பிம்பமாக இருந்தாலும் இதன் கோணம் என்றைக்கும் மாறாதது. புத்தகக்கண்காட்சிக்கு ஆள் வரவில்லை என்று ஒருவரோடு ஒருவர் குறைபட்டுக் கொண்டிருகையில், நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலை எத்தகைய போலியானது என்பதைத் துகிலுரித்துக்காட்டுகிறது. இந்த முகநூல் பதிவு, மலையாள எழுத்தாளர் திரு.அசோகன் சருவில் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் அளிக்கப்படும் மரியாதையை அப்பட்டமாக முன் வைத்திருக்கிறார். அசோகன் சருவில் – முகநூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது –

பிரபல மலையாள எழுத்தாளர் அசோகன் சருவில் அவர்களின் சென்னை புத்தகவிழா அனுபவம் .. அவர் முகநூலில் பதிவிட்டது (1 /08 /2017 ).

மிகவும் ரசிக்கத்தக்க ஓர் அனுபவம் . துளிகூடக் கற்பனையைக் கலக்காமல் எழுதுகிறேன்.
சென்னை புத்தக விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்னை மஹாநகரத்தில் சென்றேன் . வெளியே நல்ல சூடு . பகல் முழுதும் எழும்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வாசித்தும் முகநூலைப் பார்த்தும் நேரம் கழித்தேன்.  நம் முதலமைச்சர் திரு.பிணறாயி விஜயன் மஸ்கட் ஹோட்டல் அறையில் இருந்தும் ஊடக ஒளிப்பதிவாளர்களிடம் ” வெளியே போ” என்று ஆணையிட்டதுதான் நேற்றைய முக்கியச் செய்தி .

சாயங்காலம் ஐந்து மணிபொழுதில் புக் ஃபெயர் நடக்கும் ராயப்பேட்டை “வொய்.எம்.சி.எ” மைதானத்தைச் சென்றடைந்தேன். நூற்றுக்கணக்கான ஸ்டாலுகள் அணிவகுத்த மிகைவார்ந்த கலை-இலக்கிய உற்சவம். தமிழ் இலக்கியம் புத்தக-வெளியிடுதல் சிறப்பான ஓர் எதிர்காலத்தின் திருப்புமுனையில் என்பதை உணர்ந்தேன். “பாரதி புத்தகாலயம்” என்ற பதிப்பகம்தான் முன்னிலையில்.

நிகழ்ச்சி இனிதே தொடங்கியது . நிறைந்த அரங்கு . ஏராளமான எழுத்தாளர்கள் அரங்கில் கௌரவிக்கப்பட்டனர் . நாவலிஸ்ட் பிரபஞ்சன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர். அவர் என் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துபேசினார். தமிழில் மொழிபெயர்த்த என் சிறுகதைத்தொகுப்பு “இரண்டு புத்தகங்கள் ” அவரிடமிருந்தது .மலையாளமும் தமிழும் கலந்து நானும் கொஞ்சம் நேரம் உரையாடினேன். அதாவது பேசினேன் .

ஓ… இவரோட வீர சூரசெயல்களைச் சொல்லத் தொடங்கிட்டாரே .. என்று நினைத்து வாசிப்பதை நிறுத்திவிடாதீர்கள். இனிமேல்தான் சுவையான அந்நிகழ்வு வருகிறது.

அரங்கிலிருந்தும் நேராகக் கெஸ்ட் ரூமுக்கு சென்றேன். அங்கு நான்கைந்துபேர் என்னருகே வந்து பத்திரிகையாளர்கள் என்று தங்களை அறிமுகம் செய்தனர். எனக்குப் பெருமையாக இருந்தது. அதாவது மோசமல்லாத ஒரு சம்பவம் அல்லவா அது ? என்னுடைய பேச்சு நன்றாக இருந்தது என்று கூறினார்கள். பிரபஞ்சன் என்னைப்பற்றிக் கூறியவற்றைச் செய்தியாகப் போடப்போகிறோம் என்றனர். நானும் நன்றி சொல்லி அவர்களை வணங்கினேன்.

அதற்குப் பிறகும் அவர்கள் அங்கேயே தயக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்தனர். என்னிடம் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசவேண்டுமாம். ஒரு விபத்தின் நாற்றத்தை நான் உணரத்தொடங்கினேன். கேரளா முதலமைச்சரின் “வெளியே போ” என்ற விவாத பேச்சைப் பற்றியான கேள்வியோ ? எனக்குள் இருக்கும் அரசியல்வாதி திடீரென்று விழித்துக்கொண்டான். என்ன பதில் சொல்லலாம் ?

ஆனால் அவர்கள் சொன்னது மற்றொரு விஷயம். செய்தி நன்றாகப் போடுவதற்கான பிரதிபலனாக நான் அவர்களுக்குப் பணம் கொடுக்கவேண்டுமாம். இப்படியொரு ஏற்பாட்டைப் பற்றியான விபரத்தை நான் கேட்டதேயில்லை என்பதால் வியந்தேன். மிகுந்த அவமானம். உங்களின் விளம்பரம் எனக்குத் தேவையில்லை என்று கறாராகக் கூறினேன். ஆனால் அதில் ஒருவர் பவ்வியமாக வணங்கி, சொன்னார் “ஏதாவது கொடுங்க சார் , பயணக்கூலியாவது ..”

முன்பு அலுவலகத்தில் வேலைபுரியும் காலத்தில் என்னைப் பற்றித் தெரியாத சிலர் என் மேஜை மீது லஞ்சபணம் வைப்பார்கள். அப்போதெல்லாம் எனக்குப் பாதம் முதல் சிரஸ்ஸு வரை ஒரு நடுக்கம் வரும். வருடங்களுக்குப் பின் அதே நடுக்கம் இப்போது மீண்டும் . உச்சத்தில் அலறினேன் “வெளியே போ”

*

நிலைக்கண்ணாடியிலிருந்து

நேர்காணல் – கடங்கநேரியான்

0

நீங்கள் தமிழ் தேசியவாதியா?

பொருளாதாரமயமாக்கல் தனித்த தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்து தனக்கான சந்தையை நிர்மாணிக்கும் திட்டத்தோடு ஒற்றை உலகை நிர்மாணிக்க முயற்சிக்கிறது. அதன் பொருட்டு பூர்வகுடிகளின் மீது பண்பாட்டு ரீதிரியாகவும் பொருளாதார ரீதியாகவும் போர் தொடுக்கின்றன. உதாரணமாக ஜல்லிக்கட்டு மீதான தடை , கள் இறக்குவதற்கு தடை விதித்திருக்கும் அரசு தான் டாஸ்மாக் நடத்துகிறது. மீத்தேன் , நியூட்ரினோ , அணு உலைகள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். என் நிலத்தையும் அதன் மீதான மனிதர்களின் உரிமையையும் காக்கவே போராட வேண்டிய சூழலில் தமிழ்த் தேசியவாதியாக செயல்படுவதுதான் நியாயமாகும்.

கனவு மெய்ப்படும் கதை – 5

0

ணபதியோடு கடந்த பத்து நாட்களாகச் சந்திக்க இயலாமல் இருக்கிறேன். இருவருக்கும் பரஸ்பரம் மும்முரமென்று என்று சொல்ல நிறைய காரணங்கள் இருக்கின்றன. நானும் தொடர்ச்சியாக இந்த இரண்டு கட்டுரைகளுக்கு மத்தியில் ஆறு கதைகள் எழுதிவிட்டேன். எத்தனைத் தேறும் என்று கேட்காதீர்கள். கணபதி தன் ஓவியங்களோடு சேர்ந்து, முக்கியமான கலை விமர்சனங்கள், பதிவுகளை மொழிபெயர்த்துப் போடுகிறார். அவரது மொழிபெயர்ப்பு மிகவும் நேர்த்தியாகவும், அவர் உருவாக்குகின்ற கலைச்சொற்கள் அதைவிட மிக நேர்த்தியாக இருக்கின்றன. சமீபத்தில் வரைதலைக் கீற்றுதல் என்று சொல்லலானார். அதுபோல நிறைய புது கலைச்சொற்களை புதிதாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் கைகளுக்கு இப்போது பேனாவும் கச்சிதமாக இருக்கிறது அதற்கும் வேலை இருக்கிறது.

கிராஃபிக் நாவல் இப்போது காட்சிகளை திட்டமிட்டு முடித்தாகிவிட்டது. அடுத்ததாக கேரக்டரைசேஷனுக்குள் நுழைகிறோம். இதில் ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறது, அதைத்தான் உங்களுடன் பகிர்கிறேன்.

Alphaji – character – Athu oru kanavu – Ganapathy Subramaniam

என் நண்பரை (குருவாகவும் சொல்லலாம்) இந்தக் கதையில் ஆல்ஃபாஜி எனும் கேரக்டரில் எழுதியிருந்தேன்.  அவர் அந்த கேரக்டரை டிசைன் செய்த போது கிட்டத்தட்ட அவரே வந்துவிட்டார் என்கிற ஆச்சரியம். எப்படி இந்த தொடர்பு கதாசிரியருக்கும் ஓவியருக்குமிடையே நிகழ்ந்திருக்கிறது என்று யோசிக்கும் போது, கதாசிரியர்களுக்கும் – இல்லஸ்ட்ரேட்டர்களுக்குமான தொடர்பு பற்றி ஒரு யோசனை வந்தது (கிங் விஷ்வாவிடம் கேட்கலாம்) அதற்கு சப்ளிமெண்டரியாக் இன்னுமொரு யோசனை. ஆம் இந்த மாங்காவிற்கென ஒரு supplementary கொண்டு வந்தால் என்ன?. இது குறித்து அடுத்தக் கட்டுரையில் பேசுவோம். மேலே சொன்னது போல அவர் நாம் எழுதும் கதாப்பாத்திரங்களை அப்படியே கொண்டு வந்துவிடுவார் என்று முன்னமே தோன்றி தான், கண்ணமாவை வர்ணிக்காமல் விட்டுவிட்டோம்.

நேரடியாக உங்கள் முன் ஒரு மாங்காவை – இது தான் முதல் தமிழ்மாங்கா என்று நிறுவிவிட்டு அதனைச் சந்தைப்படுத்தி ஒருவேளை வெற்றியும் கூட பெற்றிடலாம். ஆனால் இது எங்கள் நோக்கமல்ல, இலக்கியங்களில் இருநூறு பிரதிகள் விற்றாலே சந்தோஷப்படும் கதாசிரியனின் கதை உலகின் எந்த மொழியில் எழுதப்படும் கதைகளுக்கும் குறைவானது அல்ல. ஆனால் அவனை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக லாபநோக்கைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத பீடங்களைச் சாடும் நோக்கில்லாததால் விட்டுவிடுவோம். மாங்கா வடிவத்தில் கதைகளைக் கொண்டுவருவது, வாசிப்பைக் குறைத்துக்கொண்ட மக்களுக்கு, வெகுஜனக் கதைகளென்று தரம்பிரித்து வாசிப்பின் தரத்தைக் குறைத்து அவர்களுக்கு இலக்கியத்தின் மீது கொண்டிருந்த ஒவ்வாமைக்கு மாற்று மருந்தாகத் தான் இவை இருக்கும். அது மட்டுமன்று நல்ல தமிழ் இலக்கியங்களை மிக எளிதாக மொழிபெயர்த்து அதனை தமிழ்நிலம் தாண்டியும் கொண்டு சேர்க்க முடியும்.

ஆத்மாநாம், நகுலன், பிரம்மராஜன், ஞானக்கூத்தன் ஆகியப் பெயர்களை லலித்கலா கேலரியில் ஒரு கண்காட்சியின் தேநீர் விருந்தில் குறைந்தபட்சம் யாரோ ஒரு ஓவியர் அந்த கவிஞர்களின் பெயரையோ அல்லது ஒரு எழுத்தாளனின் பெயரையோ உச்சரித்திருப்பார்கள். அந்த காலக்கட்டத்தோடு ஒரு துண்டித்தல் நிகழ்ந்துவிட்டது, இப்பவும் ட்ராட்ஸ்கி மருது போன்ற சிலர் இலக்கியம் பேசும் மேடைகளில் காணக்கிடைத்தாலும். இலக்கியம் அந்நியப்பட்டிருப்பது தான் உண்மை. ஆக்டோவிய பாஜ்ஜைப் பற்றி பேசும் எந்த கவிஞனும் அவனுடன் சேர்ந்து ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் ஜே.ஸ்வாமிநாதனைத் தெரிந்து கொள்ளவேயில்லை. சரி புலம்பல்களை விடுவோம்.

என் எழுபத்து மூன்றாவது வயதில் தான் விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் பூச்சிகளின் அமைப்புகள் பற்றி அசலானவற்றை சிறிதளவு தெரிந்துகொண்டேன். அதன் விளைவாக என் எம்பதாவது வயதில் அதில் சில முன்னேற்றங்களை உருவாக்கினேன். எனது 90வது வயதில் அதன் மர்மங்களில் நான் ஊடுருவியிருப்பேன். என் நூறாவது வயதில் நான் அற்புதங்களை வந்தடைவேன். ஆனால், எனது நூற்றிப்பத்தாம் தான் வயதில் நான் வரைந்த யாவற்றிலுமிருந்து மிகச்சிறிய புள்ளியொன்று உயிரோடு இருக்கும்.

ஜப்பானியக் கலைஞன் ஹோகுசாயின் வரிகள் அவை. தன் வாழ்வின் மொத்த உழைப்பையும் வரைவதற்காக அவன் செலவழித்திருக்கிறான். அதற்காக அவன் இன்னும் தன் வாழ்நாளை நீட்டிக்க விரும்பியிருக்கிறான். அது தான் வரைந்தவற்றில் ஏதோ ஒரு புள்ளியின் உயிர்பெறுதலுக்காக வேண்டியவை. தன் முழு ஆயுளையும் ஒரேயொரு படைப்பிற்கான வேலையைச் செய்து கொண்டிருப்பவனாகத் தான் (work in progress) அவன் தன்னை அறிந்திருக்கிறான்.

Art Edgeஎனப்படும் அமெரிக்க கலை இதழ் ஒன்றில், WIP பற்றிய விவாதங்கள் நிறையவே வாசிக்க நேர்ந்தது. கலைஞர்கள் வெறுமனே தங்கள் முழுமையடைந்த படைப்புகளை மற்றும் கண்காட்சியில் தமது பார்வையாளர்களுக்குக் காட்டுவது காலாவதியான விஷயமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றளவும் தங்களது நுட்பங்களை வெளியில் தெரியாமல் பாதுகாத்து வரும் பல கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மேற்சொன்ன இரண்டு விஷயங்களுக்குமிடையே இருக்கின்ற நுட்பமான முரணை உணர்ந்து கொள்ள முடிகிறதா. தன் முழு வாழ்நாளையும் ஒரே வேலையைச் செய்து வருவதாக நினைக்கும் கலைஞர்களுக்கும், தன் கலை வேலைகள் எப்படி உருவாகின்றன என்பதை மறைத்து வரும் கலைஞர்களுக்கும் இடையே இருக்கின்ற சிந்தனைப் போக்கு, அல்லது கலை குறித்த அவர்களது தத்துவார்த்த இடைவெளி எத்தனை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

அவற்றுள் உயர்வு தாழ்வு குறித்த விவாதமாக இங்கு பேசுவதற்கு அல்ல அவர்கள் தங்கள் வாழ்க்கையை கலையோடு எங்கணம் தொடர்புபடுத்தி வாழ்கிறார்கள் என்று ஒரு தரிசனத்தைத் தருகிறது. இன்றைக்கு மேற்குலகின் கோட்பாடுகளில் கலைக்குச் சமமாக கலைவேலைப்பாட்டினையும் கருத வேண்டும் (Work & Work of art) என்று நிறையப்பேசப்படுகிறது. ஆகவே தான் இந்த தமிழ் மாங்கா வடிவம் உருவாகும் கதை என தொடர்ந்து பதிவிடக் காரணம்.

ஒருவேளை, இந்த வொர்க் இன் ப்ராக்ரஸ் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தாமல் கிடைக்கும் வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஏதோவொன்றில் நிறைவு அல்லது ஏமாற்றம் கிட்டியதும் மேலும் ஒரு முயற்சியை எடுக்காமல் விட்டுவிட்டுச் செல்லும் அபாயம் இருப்பதாலும், வேறு யாரேனும் இந்தத் துறையில் இறங்கி சாதிப்பதற்கான இடர்களைப் பற்றி பேசிட ஒரு வெளி தேவைப்படுகிறது. அவ்வாறு பிரச்சினைகள் குறித்துப்பேசிட ஒரு வெளியை ஏற்படுத்தி அதில் இவற்றை எல்லாம் பதிவதால் கூடுதலாக ஒரு திருப்தி கிடைக்கிறது என்பதும் உண்மை. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கலையை உருவாக்கலாம், ஆனால் அதற்கடுத்தக்கட்டம் மிகவும் திட்டமிடல், கவனம், ஒழுங்கு ஆகியன தேவைப்படும்.

ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன், உண்மையில் நம்மில் யாரேனும் 110 வயது கூட வாழ ஆசைப்பட வேண்டாம், 80,90 வயது வரைக்கும் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோமா அல்லது கனவு கண்டிருக்கிறோமா? நம் வாழ்வியல் சூழலில் அதற்கான இடமிருக்கிறதா. யோசித்துப்பார்த்தால், அந்த சிந்தனை உங்களுக்கு சாத்தியமானால் விரக்தி மட்டுமே மிஞ்சும் இறுதியில் அது இயலவே இயலாது என்றும் தோன்றலாம்.

அதே சமயம், கலை அதனைச் சாத்தியப்படுத்துமா என்று குதர்க்கமாய் கேட்டால், பதில் சொல்லலாம் கலை குறைந்தபட்சம் அந்தக் கனவினைச் சாத்தியப்படுத்தும் என்று.

கனவு மெய்ப்படும் என்கிற இந்த தொடர், கிராஃபிக் நாவல்/தமிழ் மாங்கா என்கிற வடிவத்தை நாங்கள் கொண்டுவர இயலாமல் ஒத்திப்போட்டதால் இத்தொடரும் நிறைவு பெறுகிறது. மீண்டும் இது போன்ற ஒரு முயற்சி சாத்தியமாகும் என நம்புகிறேன்

ஜீவ கரிகாலன்.

கனவு மெய்ப்படும் கதை – 4

0

பரிமலை மலைக்கு செல்லும் போதுதான் முதன்முதலில் சூஃபி இசையைக் கேட்கத்துவங்கினேன் (ஏன் இங்கிருந்து கட்டுரையை ஆரம்பிக்கிறேன் என்று தெரியவில்லை). சினிமாப்பாடல்கள் கேட்கக் கூடாது என்றும், இறைநிலையில் கவனம் குவிந்திருக்கும் என்கிற கட்டளைக்குப் பணிய விரும்பிய எனக்கு, ‘சந்நிதியில் கட்டும்கட்டியில்’ கவனம் கோர்க்கவில்லை. செயற்கையான பஜனையை செய்வதால் என்ன நஷ்டம் ஆகப்போகின்றது? ஆனால் எழுதப்போகும் பரிட்சைக்கு கேட்கப்படும் துணைப்பாடப்பிரிவில் முதல் மூன்று பாடங்களில் ஏதோ ஒன்று இறுதித்தேர்வில் வந்துவிடும் என்று வாசித்துச்செல்ல என்னால் இயலாது. விடுபடும் இடங்களில் தான் மனம் லயிக்கிறது. முட்டாளென்று உங்களைப் போலவே அவளும் என்னை ஏசுவது என் காதில் விழுகிறது. என்ன செய்ய சூஃபி இசையில் அடிபணிதலும், ஒப்படைத்தலும் இயல்பாக செலுத்துகிறது, பதினெட்டுப்படிகளேறும் போது களைப்பைக் காட்டிலும், வலியைக் காட்டிலும், தவறான இசையைக்கேட்டுவிட்டேனோ என்று குழம்பியபடியே தூக்கிவிடப்பட்டேன். மேலே ஏறியவுடன் முதலில் தெரிந்தது தத்வமஸி. நானே அதுவாக இருக்கிறேன் என்று அதுவே சொன்னது. ‘இன்ஷா அல்லா’ என்றும் சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லை, அதற்குப் பின்னர் தரிசனம் செய்ய அழைத்துச்சென்றார்கள் எதுவும் நினைவில் இல்லை. என்னைப் பொருத்தவரை ‘தத்வமஸி’ என்கிற தத்துவத்தைப் புரிவதற்கு தான் குறைந்தபட்சம் பதினெட்டு முறை வரவேண்டுமென்று காரணம் வைத்திருக்கலாம். உண்மையான தரிசனம் எதுவென்றால் அதுவே. எனக்கு இரண்டாம் முறை என்பதில் லேசான பெருமிதம் தான். அவளிடமும் அதைத்தான் சொன்னேன், நான் வேறுயாராகவும் இல்லை அதுவாக உருமாறிக்கொண்டிருக்கிறேன் என்று.

சூப்பர் ஈகோ, ஈகோவை அடுத்த கீழடுக்கில் தான் அது இருக்கிறது என்று ஃப்ராய்ட் சொல்கிறார். அது(ID) மேலான நிலையில் இருப்பது. சூப்பர் ஈகோவைத் துறந்து, ஈகோவை ஒப்படைத்தால் தான் அதுவாக இருக்க முடியும், அவளை அடையும் வழியும் கூட அதுதான். அவ்வாறே அந்தவழிமுறை தான் கலையாகிறதோ என்று பேசுமிடம், மனிதர்களற்றப் பகுதியில் ஓடும் தொந்தரவு அற்ற நதியைப் போன்றது.

கணபதியோடு அகமும்,புறமும் கலைவசப்பட்ட மாலையொன்றைப் பகிர்ந்த வேளையில், ஏதோ ஒரு வேலை ஒன்று தயாராவதைக் கடலுக்குச் சொல்லிவிட்டேன். அவர் சொந்தமாக தனக்கேயான ஒரு கதையை கிராஃபிக் பண்ணுவதற்காகத் தயாரித்து வைத்திருந்தார். அதில் சில பகுதிகளை வாசித்திருக்கிறேன். கைத்தறியில் இங்குமங்கும் போய்வரும் கட்டை போல் தத்துவங்களோடு தர்க்கங்கள் புரிந்து கொண்டிருந்த ஒரு கதை அது, நாவலாகவும் சொல்லலாம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. பத்துவருடங்களுக்கு மேலாகவும் அவர் கனவிலிருந்த கிராஃபிக் நாவல் வரும்போது தமிழில் என் கதை எனும் தற்செயலின் அற்புதம்.

கடந்த 19(மார்ச்17)ஆம் தியதி கூவ நதிக்கரையில் இருக்கின்ற சிவஸ்தலங்களை தொடர்ந்து கொண்டிருந்த என்னுடன் வரலாற்றறிஞர்களும், ஆர்வலர்களும் இருக்க, மனம் தனித்திருந்தது. கிட்டதட்ட நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் தனது கிராஃபிக் நாவல் வேலைகளுக்காக, ஒரு ட்ரான்ஸ் கிரியேட்டராக தன்னைப் பாவித்துக்கொண்டு கதையினை உருவங்களாக்கிக் கொண்டிருந்த அவருக்கு அந்த மாலை சுமார் 4.30 மணி போல நாம் ஏன் இப்படி வரைந்து கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வி எழுந்திருக்க வேண்டும். நானும் அதே கட்டத்தில் தான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் என்று தெரியாமலே பயணித்துக்கொண்டிருக்கும் சுவாரஸ்யத்தின் ரஸவாத மோகத்தில் என்னை ஆழ்த்தியபடியும் குழம்பியபடியும் போய்க்கொண்டிருந்தேன்.

குசத்தலையும் கூவம் ஆறும் பிரியும் இடத்திலிருந்த கேசவராம் சிவன்கோயிலில் இருந்து தக்கோலம் நோக்கிச் செல்ல ஆரம்பித்த பாதை குசத்தலை நதியின் தடத்தில்.. ஆற்றினுள் இறங்கி செல்லும் வழியில் மேடும் பள்ளமுமாக இறங்கி ஏறிக்கொண்டிருந்தோம். புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சுவடுகள் தென்படும் இந்நதியென்று உடனிருந்த ஆய்வாளர்கள் செல்ல வண்டி நின்றது. இப்போது மாஃபியாக்கள் மண்ணைச் சுரண்டியதால் மழைபெய்தால் கூட மண்ணில் மழை தங்குவதில்லை, ஆனால் அவ்விடத்திலிருந்து ஐம்பது அறுபது அடிக்கும் மேலே நதிநீர் ஓடிய தடயமிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

images (1)அமெரிக்காவின் பிரபல இல்லஸ்ட்ரேட்டரான நார்மென் ராக்வெல் – தன் வாழ்நாளில் நிறைய அவமானங்களைச் சந்தித்ததாக அவரது நண்பரான உளவியலாளர் எரிக்சன் சொல்லியிருக்கிறார். ஒரு விபரணப்பட ஓவியராக இருப்பது சமகாலத்தில் தாழ்வாகப் பார்க்கப்படுவதாக அவர் மனம் வெதும்பியிருப்பதாக அவர் சொல்கிறார். அவரது ஓவியங்கள் யதார்த்த பாணியில் இருப்பதால் 20ஆம் நூற்றாண்டின் மத்திமத்தில் உருவாகியிருந்த புதியபுதிய கோட்பாடுகளின் பின்னேயிருந்தும், அரூபங்களுக்கு மாறியிருந்த பல ஓவியர்களும் விமர்சகர்களையும் உருவாக்கியிருந்தார்கள். இன்றைக்கு அவரது ஓவியங்கள் யாவுமே கிளாஸிக்குகளாக சந்தையில் முக்கிய இடம்வகிக்கின்றன. அவரது ப்ரேக்கிங் ஹோம் டைஸ் எனும் ஓவியம் கிட்டதட்ட 90 கோடிகளுக்கு* விற்பனையாகி இருக்கிறது. இங்கும் கூட கே.மாதவனின் ஒர் சிற்றிதலில் கே.மாதவனின் ஓவியங்களைக் கிளாசிக்காக பாவித்துக் கட்டுரை எழுதமுடியும், கொண்டாட முடியும். (தமிழ் சிறுபத்திரிக்கையுலகில் அட்டைப்படத்தில் வந்தால் – வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு சமானம் தானே). நார்மென் ராக்வெல் ஓவியத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி, சமூக மாற்றம், உலகப்போர், வாழ்வியல் மாற்றங்கள் குறித்த அவரது ஏக்கம் ஒன்று தென்படுவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஒரு அரூபம் தருகின்ற உணர்வைப் போன்றே அவரது ஓவியங்களும் கலையம்சமானது என்று சொல்லலாம். இதைப்பற்றிய கவலை அவருக்கு இல்லை, தன் பாணியிலேயே அவர் தொடர்ந்தார். இன்று அவர் பெயரில் உள்ள அருங்காட்சியகம் உலக அளவில் பெயர்பெற்றது.

”அது ஒரு கனவு” இந்த இருபது பக்க கதையை, திரைக்கதை போல ஷாட் ஷாட்டாகப் பிரித்துக்கொடுத்தால் அதனை கிராஃபிக்காக மாற்றுவது சரியான பேட்டர்னாகக் கூட இருக்கக்கூடும். ஆனால் ஏற்கனவே சொன்னது போல வெறும் கதைக்கு உருவம் கொடுப்பதாக மட்டும் இந்த வேலை இருந்துவிடக்கூடாது. இப்படியான ஒரு வாழ்நாள் கனவு நனவாகும் போது,  தொடர்ந்து வேலை செய்ய பாதை அமைத்துக்கொடுக்குமா என்பது பிங்க் நோட்டு பத்து லட்ச ரூபாய் கேள்வி(எத்தனை காலம் மில்லியன் டாலர்னு மட்டும் சொல்ல – டினாமினேஷனையும் சேர்த்து சொல்வோம்).

தமிழ் வாசிப்புலகத்தின் எண்ணிக்கையைத் தெரிந்தும் இப்படியான முயற்சியில் இறங்கியபின்னர், இருபது பக்கங்களையும் கிராஃபிக்காக விரிப்பதற்காக அவர் இதுவரை அறுபது பக்கங்களைத் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த அறுபது பக்கங்களில் சுமார் 350 சட்டகங்களில் ஓவியங்கள் வரையவேண்டும். அதுவும் அவர் திட்டமிட்டிருக்கின்ற பாணி முற்றிலும் பரிட்சார்த்த முறையும் கூட என்பது கூடுதலான சுமை.

  1. முதலில் கதைக்கான காட்சிகளுக்கு உருவம் கொடுக்கும் சாத்தியக்கோடுகளை உருவாக்குதல்
  2. நாவலுக்குத் தேவையான ஃப்ரேம்களின் எண்ணிக்கைகள், பக்க அளவுகள்
  3. முக்கியமான தருணங்களுக்கு ஏற்றவாறு பின்னர் மாற்றி அமைத்துக்கொள்ளுதல்
  4. உருவங்கள், நிலக்காட்சி எதுவும் மடிப்பினில் இருக்கின்ற விஷயங்கள் குறித்த முடிவு, திட்டமிடல்
  5. காட்சிகளை வரைதல்
  6. கதையோடு ஆசிரியரின் ஒப்பிடல் மற்றும் திருத்தம்
  7. இறுதி வடிவம் நோக்கி வரைதல்
  8. கணினித் தரவேற்றத்துடன் – அதை சரிபார்த்தல் மெருக்கூட்டல்
  9. புத்தகத்திற்கு ஏற்ற மாதிரியான வடிவமைப்பு
  10.  அலங்காரங்கள்
  11. அட்டைப்படம்

அதற்குப்பின்னர் வேலை பப்ளிஷரின் கைக்கு மாறுகிறது.

உருவச்சித்திரங்களிலிருந்து அரூபத்திற்கு இயல்பாக நகர்ந்துக் கொண்டிருந்த கணபதியின் பயணத்தில், திடீரென்று ரோலர் கோஸ்டர் பயணமாக ஒரு பழமையான மாங்கா ஓவியரைப் போல தரையில் அமர்ந்து சமணமிட்டு வரைந்துகொண்டிருந்த நாளொன்றில் தான் இது தோன்றியிருக்க வேண்டும். அவர் சொன்ன போது நான் உணர்ந்து கொண்டேன். அவர் மனதிற்குள் தன் செயல்கள் குறித்த கேள்வியாய் எழுந்த சுயம்சார்ந்த கேள்வி அது.

*

ஒரு நூறு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலே, ஆற்றின் தடையமாக அங்கு குவிந்திருந்த கூழாங்கற்களை வெவ்வேறு வடிவத்தில் கண்டோம். சின்ன பால்ரஸ் குண்டுகளைப் போன்ற கற்களை, எங்கள் சாரதியாக வந்திருந்த வைட்காலர் சம்சாரி தன் குழந்தைகளுக்காக சேமித்துக்கொண்டிருந்தார். ஆனால் எனக்கோ ஓவல் வடிவத்தில் தான் அந்த வெயிலில் பொறுக்க முடிந்தது. சுப்ரமணியசாமியாய் தெரிந்த ஒரு அன்பர் என்னை தேர்ந்த பொறுக்கியெனப் பாராட்டினார். பொதுவாக இந்த மாதிரியான கற்களை எடுத்து நாம் விரும்பும் தெய்வமாக நினைத்து வழிபட்டால், அது அதுவாகவே பலனளிக்கும் என்றார்.

அரூபம் ரூபம் என்கிற எல்லாவகையான அளவுமே மனிதனுக்குத் தானே, கற்களுக்கோ, பிரபஞ்சத்திற்கோ அதற்கான அக்கறை எதற்கு வைக்கனும் ? கல்லெனும் அரூபத்தில், ஒரு உருவத்தை மனதளவில் Install செய்வதற்கும், இன்றைய installation கலையைப் புரிந்துகொள்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதா என்ன?  இப்படியே கேள்விகேட்டு எழுதிக்கொண்டிருந்தால் – எந்த இதழிலும் பத்தி எழுத வாய்ப்பே கிடைக்காது. பதிப்பிக்க வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று சொன்னபோது தான் அதுவாகவே ஆனேன். இப்போது என்னென்னவோ ஓடிகின்றது அந்த காலத்திற்குள் தன்னைப் புதைத்துவைத்த குசத்தலை நதியென அவை ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சுப்ரமணியசாமியிடம் இந்தக் கல்லை நதியென நினைத்து வழிபட முடியுமா என்றேன் நதியை அழித்துவிட்டு கேன்சர் கிருமியாக உலகத்தில் ஜீவித்துக்கொண்டிருப்பவனாகிய நான்.

அன்றைய உலா முடித்து திரும்புகையில் திநகரில் பார்கிங்கில் போட்டிருந்த வண்டியை எடுக்கும்போது, ஏனோ பிள்ளையாராக வழிபடவிருந்த கூழாங்கல்லினை கணபதிக்கு கொடுக்கத் தோன்றிற்று. நேரே அவரிடம் சென்று கூழாங்கல்லினை நீட்டுகையில் அவர் உணர்வு வயப்பட்டிருந்தார்.

”நானும் நினைத்துக்கொண்டிருந்தேன் நான் வரைவது ஏன் கூழாங்கல்லைப் போல இல்லை” என அவர் என்னிடம் சொல்லும்போது அதற்கு பதில் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அக்கல்லினை அவரிடம் கொடுத்துவிட்டு மட்டும் வந்துவிட்டேன். அதை அவர் புத்தருக்கு அருகில்  வைத்திருப்பார் போல, முதன்முதலில் புத்தருக்கு அமைதி கிட்டியிருக்கும், என்று சிரிக்கையில் அதில் அரசியலும் கலந்திருந்தது.சித்தார்த்தருக்கும் சரி, நாமும் சரி எல்லாவற்றிட்கும் மொழியில் பதில்கூறிவிட முடியும் என்று முயற்சிக்கையில் தான் கலவரப்பட்டுக்கிடக்கிறோம்.

தத்வாக்களை நான் தெரிந்துகொள்ளும் போது தான் அவளையும் தெரிந்துகொண்டிருந்தேன் இருந்தபோதும் அவற்றை அடைவதற்கு முயற்சிக்கும் வினைகள் பயனற்றே போயின. ஆனால் ஒரே ஒரு சாத்தியம் அதுவாக ஆவதுதான்.

ஒரே சமயத்தில் கோடுகளோடு காகிதத்தில் உருவப்படங்களை வரைந்துகொண்டும் அதற்கிணையாக அரூப ஓவியத்தீட்டல்களை செய்துகொண்டிருந்தக் கலைஞன் ஏன் கூழாங்கல் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும். இத்தனை ஒலியாலும், காற்றாலும் மாசுபட்ட சூழலில் ஒருமித்த மனநிலையில் வேலை செய்யும் ஒருவன் கல் தானே, அதிலும் அவன் கலையைச் செய்பவனாக இருந்தால் அவனே கூழாங்கல் தானே.

17362891_1347311718640631_2232863452001051435_n

             * Isn’t it amazing the Buddha and the pebble are of same color and texture? amusing!

             * Stunned to see this… Pebbles are senior to Buddha..

             * Not only by Time… But also by the Zen

– ஜீவ கரிகாலன்

கனவு மெய்ப்படும் கதை – 3

1

சென்ற பதிவில் தமிழில் இது முதல் முயற்சி என்று சொல்லிவிட்டேன். எந்தவித Claiming அல்லது தலைக்கணத்திலிருந்து சொல்லாமல், ஒன்றை உருவாக்குகின்ற excitementல் இருந்துதான் சொல்லிச்சென்றாலும், அதற்கான கருத்து ஒன்றாக அமேசானில் கிடைக்கின்ற கிராஃபிக் நாவல்கள் குறித்த பட்டியல் ஒன்றினைப் பட்டியலிட்டுக் கருத்திட்டத் தோழமை தான் இந்தப் பகுதி எழுதுவதற்கான காரணம். இப்படி தொடர்ந்து கேள்விகள் எழுப்பியும், விவாதம் நடத்தினால். அந்தப் பக்கம் கிராஃபிக் நாவல் உருவாகும் பொழுது இந்தப் பக்கம் நல்லதொரு supplementary ஒன்றை உருவாக்கிவிடலாம்.

நாங்கள் கொண்டு வரும் முயற்சி, தமிழில் வருகின்ற முதல் மாங்கா வடிவம். மாங்காவைப் புரிந்து கொள்ள கிராஃபிக் நாவலைப் புரிந்து கொள்ள வேண்டும். கிராஃபிக் நாவலைப் புரிந்து கொள்ள அவற்றை மற்ற காமிக்ஸ்களுடன் பிரித்துப் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.

காமிக்ஸ் VS கிராபிக் நாவல்

ட்ராட்ஸ்கி மருது, கிங் விஷ்வா போன்றோர்கள் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் இதற்கான விளக்கங்கள் அளித்து வந்திருக்கின்றனர். இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

காமிக்ஸ் எனும் சித்திரக்கதைகள் – பெரும்பாலும் ஒரு கதையை வரைவது என்கிற நோக்கத்தில் அல்ல, ஒரு கதாப்பாத்திரத்திற்கான கதையை என்று எடுத்துக் கொள்ளலாம். பேட்மேன், ஸ்பைடர்மேன், மாயாவி, மாடஸ்டி, இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், லக்கி லுக், மாண்ட்ரேக், சிக்பில் இப்படி யாரோ ஒரு கதாப்பாத்திரத்தின் சாகசங்களை அத்தியாயங்களாக பகுதிகளாகப் பிரித்துச் சொல்வது என்பது காமிக்ஸ் ஆகும்.

கிராஃபிக் நாவல் என்பது கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தாமல் கதையை முன்னிறுத்தி வரைவது. இது ஒரு நாவலென்றால் என்னவென்று நினைக்கிறோமோ அதையே கிராஃபிக் பண்ணுவது என்று புரிந்துகொள்ளலாம். வேறு எந்த வகையிலும் எடுத்துக்கொள்ள முடியாத வடிவங்களை நாவலென்று சொல்லலாம் என்று ஒரு சொலவடை இருக்கிறது இலக்கியத்தில். இதை நாவலின் இலகுத்தன்மைக்கு உதாரணமாகவும் சொல்லலாம். கிராஃபிக் நாவலின் சிறப்புத்தன்மை என்றும் இதையே சொல்லலாம். காமிக்ஸ் தனக்கென வைத்த எல்லைகளை தகர்த்தெறியும் போது தனக்குத் தானே சூட்டிய பெயராக கிராஃபிக் நாவலைச் சொல்லலாம்.

அதாவது கிராஃபிக் நாவலால் ஒரு எழுத்துவடிவம் சந்திக்கக் கூடிய அனைத்துச் சவால்களையும் சந்திக்க முடியும்.

அநேகமாக இந்த ஸ்டேட்மண்ட்டில் சிக்கல்களோ, சர்ச்சைகளோ எழலாம் என்பதால் இதை நானே அடிக்கோடிட்டு வைக்கிறேன். இதை விவாதிக்கும் முன் இன்னும் சில வித்தியாசங்கள்.
நானும் கணபதியும் சென்ற பதிவிற்கு வந்த, அந்த சில கருத்துகளுக்கு பதிலைச் சொல்லிப் பார்க்க மேற்சொன்ன வித்தியாசமே கிடைத்தது. ஆனால் அந்த வித்தியாசம் தான் இணையத்தில் தேடினாலோ எந்த விவாத்தில் தேடினாலோ கிடைக்கக் கூடிய பதில். ஆனால் நேரடியாக ஒரு கிராஃபிக் நாவல் உருவாக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டு வரும் எங்களால் வேறு ஒருத் தகவலையும் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

அது கதாசிரியருக்கும், ஓவியருக்குமானத் தொடர்பு.

காமிக்ஸில் கதாசிரியர் என்பவர், ஓவியர் என்பவர் இருவருமே பெரும்பாலும் commissioned வேலையாட்களாக தனித்தனியாகவே வேலை செய்வார்கள். ஒரு காமிக்ஸ் தொடர் முழுக்க ஒரே ஓவியர் தான் வரைய வேண்டும் என்றில்லை, அவர்கள் வேறுவேறாக இருக்கலாம்.

உதாரணம் கதாசிரியர் போனாலியும் (Gian Luigi Bonelli), ஓவியர் கலேப்பினியும்(Aurelio Galleppini) சேர்ந்து உருவாக்கியக் கதாப்பாத்திரம் இத்தாலிய காமிக்ஸ் உலகின் ஹீரோக்களில் தமிழ்நாட்டில் ரசிகர்மன்றம் வைத்திருக்கும் திருவளர்.டெக்ஸ்வில்லர் அவர்களுக்கு கதாசிரியர்களாக 11 நபர்களும், இல்லஸ்ட்ரேட்டர்களாக 39 ஓவியர்களும் இதுவரைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் கிராஃபிக் நாவலுக்காக இப்படி நடைபெற வாய்ப்பில்லை உதாரணமாக விகடனில் வந்திருந்த சந்திரஹாசன் நாவலைச் சொல்லலாம் (சு வெங்கடேசன் கதையும், க.பாலசண்முகம் ஓவியமும்).

மாங்கா ஜப்பானிய வடிவம், மாங்காவின் தந்தை என அழைக்கப்படும் ஜப்பானிய ஓவியர் ஹோகுசாயின் காலக்கட்டம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றால், ஜப்பானிய சித்திரக்கதைகள் என்பது ஒரு மரபாகப் பார்க்கப்படுகிறது. அந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற எழுதுப்பொருட்கள் கொண்டு மினிமலிசமாக ஆனால் மிகவும் ஆழமானதாக உருவாக்கப்பட்ட ஓவிய வடிவங்களே மாங்காவாகக் கருதப்படும். நமது முயற்சி கிட்டத்தட்ட அதைப் போன்ற ஒன்றே, கிராஃபிக் நாவலென்று முத்து திரைப்படத்தின் ஸ்டோரி போர்டை அப்படியே அச்சில் கொண்டுவந்தது போலன்று.

சந்திரஹாசம் வெளிவந்தபோது அது எதிர்கொண்ட விமர்சனத்தை நினைத்துப் பார்த்தேன். உண்மையில் அப்படியானதொரு புத்தகம் மாங்கா போன்று எளிமையாக வந்திருந்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அந்த முயற்சி உருவாக்கிய தடத்தில் தொடர்ந்து நிறைய ஆக்கங்கள் உருவாகித் தொடர்ந்திருக்கும். ஒரு நிறுவனம் மேற்கொண்ட நல்ல முயற்சியாக அதைக் கவனத்தில் கொள்ளலாம் அவ்வளவு தான்.

இந்த நாவலுக்கான கதை ஒரு யதார்த்தப்பாணியிலான ஒரு புனைவு. ஆனால் கிராஃபிக் நாவலுக்கான சவாலாக சிலவற்றை அது ஓவியருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் தன்மையும் கொண்டிருக்கிறது. உதாரணமாக “அது” என்கிற வார்த்தைப் பிரயோகம், எனது ஃபேஸ்புக் பதிவுகளிலேயே அது என்கிற பதிவுகளைப் பார்த்து எரிச்சல்கொண்டோர் பலரும் சிலாகித்த சிலரும் உண்டு. அது என்பது பல நேரங்களில் காதலாகவே எழுதப்பட்டாலும், அது ஆரம்பத்தில் ஒரு நோய்க்கு பயந்தே எழுதப்பட்டது, நோயினால் வந்த மரணபயம் அதுவானது, பின்னர் மரணபயத்தால் உருவான அல்லது அபயமளித்த ஆன்மீகம், எல்லாவற்றிட்கும் பின்னர் எஞ்சியிருக்கின்ற காமம் என அதுவாக எல்லாவற்றையும் சொல்ல முடிந்தது. இந்தக் கதை கூட “அது ஒரு கனவு மட்டும்” என்கிற தலைப்பு,, அது ஒரு பாதை மட்டும், அது ஒரு ஒளி மட்டும் என்கிற கதைகளைத் தொடர்ந்து எழுதப்பட்டிருந்த கதை தான். இப்படியான ஒரு வார்த்தைப் பிரயோகம் வருகின்ற இடங்களை, கணபதி எப்படி எதிர்கொள்கிறார். இந்த சவாலை மேற்கொள்ளும், கையாள்கின்ற இடமளிக்கும் வடிவம் தான் கிராஃபிக் நாவல், இதன் ஆன்மீக வடிவரீதியிலான கனெக்டிவிட்டி தான் ஜப்பானிய மாங்காவுடனானது.

pizap.com14900643146671
மாங்கா – சில உதாரணங்கள்

மற்றபடி இது சந்தைக்கு வரும்வரை முழுக்க முழுக்க தன்னை அறிந்து கொண்டிருக்கின்ற ஒரு கலைஞனது யோகப்பயிற்சி என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் புரிய வேண்டுமென்றால் – ஒரு கூழாங்கல்லினை எடுத்துத் தடவிப் பாருங்கள்.

ஜீவ கரிகாலன்

 

கனவு மெய்ப்படும் கதை – 2

1

SOME PAINTERS TRANSFORM THE SUN INTO A YELLOW SPOT, OTHERS TRANSFORM A YELLOW SPOT INTO THE SUN – PICASSO

தன் வாழ்நாள் முழுதும் ஒரே பாதையில் சீராக சென்றுக்கொண்டிருப்பவன் சாதாரணமாக பயணிப்பதாகக் கூட எடுத்துக்கொள்ளமுடியாது. மாற்றங்களை சூழலை தனது கலையில் தகவமைத்து வந்து கொண்டிருப்பவனது பயணமே நல்ல ஆக்கங்களைத் தரும்.

***

கிராஃபிக் நாவல் தமிழில் இதற்கு முன்னர் வந்திருக்கிறதா என்று பார்த்தால், சில குறிப்பிடத்தகுந்த கிராஃபிக் நாவல்கள் மொழிபெயர்ப்புக் கதைகளாக வந்துள்ளன பெரும்பாலும் அவை லயன்,முத்துவில் வெளிவரும் புகழ்பெற்றக் கதைகள் தான். முக்கியமான ஒரு படைப்பாக மர்ஜானோ சத்ரபியின் “ஈரான்” எனும் ’ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’யாக மொழிபெயர்க்கப்பட்டு விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது என்று கவிஞர் பழனிவேள். முன்னா எனும் காஷ்மீரிய வாழ்க்கையை குறியீட்டுச் சித்திரங்களோடு சித்தரித்த ஒரு கிராஃபிக் நாவலை கணபதி என்னிடம் காட்டுவதற்கு முன்னரே நாங்கள் வேலைகளைத் தொடங்கியிருந்தோம். இது முதன்முறையாக நேரடித் தமிழ் கிராஃபிக் நாவல் என்று சொல்லலாம், மாங்கா போன்றே எளிமையாகவும் சற்றே ஆழமாகவும் சித்திரங்களை உருவாக்கி வருகிறார் கணபதி. இதில் மிக முக்கியமாக நான் கருதுவது, கிராஃபிக் நாவல் உருவாகிவரும் கதையினை முடிந்தமட்டும் பதிவு செய்வது அவசியமாகப்படுகிறது..

“If you haven’t found it yet, keep looking” – Steve jobs

இந்த இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸைச் சொல்வது பொருத்தமாக இருக்கிறது, ’அது ஒரு கனவு’ இதனோடு தொடர்பு கொண்டது தான். ஆனால் கணபதியின் வாழ்க்கையையும் அது சொல்வதாகவே நான் உணர்கிறேன்.

கணபதியின் வாழ்க்கையை, அவர் தேடலை, தாகத்தை அன்று அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது தெரிந்துகொள்ளும் வாய்ப்புகிட்டியது. வழக்கமான அவர் ஸ்டூடியோ முற்றிலுமாக மாறியிருந்தது. கீழே பாய் விரித்து தரையில் அமர்ந்து வரைந்து கொண்டிருந்தார். ஒரு ஜப்பானிய மாங்கா ஓவியர் போல அந்த சூழல் அவரை Oriental கலைஞனாக orientation செய்து கொண்டிருந்தது..

அவர் விரித்திருந்த பாயில் அமர்வதற்கு என் தொப்பையோடு சற்று சூமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே அவரது Stationeryகளைப் பார்த்தவுடன் கிடைத்த உற்சாகம் தான். ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன வார்த்தைகள்.

டிஜிட்டல் யுகத்திற்கு வந்த பின்னர், பேனா தேவையில்லை என்றாலும். கணிணி உபயோகிப்பது தான் உற்பத்திக்கான அதிக சலுகைகளை நேரம், அலங்காரம் உள்ளிட்ட சமாச்சாரங்களை வழங்குகிறது என்றாலும், கையினால் வரையும் பொழுது கிடைக்கின்ற உணர்வு அலாதி. ஏற்கனவே சொன்னது போல FUN அல்லது joy என்கிற வார்த்தைகளை இங்கே பயன்படுத்துகிறேன் என்றால், அதைவிட சிறந்த வார்த்தைகள் இதை justify செய்துவிட முடியாது. பல வருடங்களாக அவரது கனவில் இருந்த ஒரு பயணத்தை திடீரென்று ஒருநாள் தொடங்கும்போது கிடைப்பது ஆனந்தமின்று வேறென்ன இருக்க முடியும், ஆனந்தம் தெவிட்டாத ஒன்றாக ஒவ்வொரு ஃப்ரேம்களை அவர் வரையும்போது கதையினை காட்சிகளாக மாற்றும் போதும் அது தொடர்ந்துவருகிறது என்றால் அங்கே fun இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.

அவர் வரைவதற்காக வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன் அத்தனையும் கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக இந்தப் பொருட்களை சேகரித்து வருவதாகச் சொன்னார், Orthodox fountain pen, கணிசமான எண்ணிக்கையில் பேனா நிப்புகள், கருப்பு மை புட்டி என அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தேன். அந்த பேனா மரத்தால் செய்யப்பட்ட பழமையான பேனா குறைந்தது அந்தப் பேனா தயாரிக்கப்பட்டு 150 வருடங்களாகியிருக்கும், ஒவ்வொரு நிப்புமே அப்படியான பழமையான ஒன்றே. ஒவ்வொரு நிப்பாக எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன், எத்தனை ஆண்டுகள் ஆகியும் கொஞ்சம் கூட துருப்பிடிக்காத, உறுதியான நிப்புகள் தயாரிக்கப்பட உற்பத்திக்கான அடிப்படைத்தன்மை எத்தனை தரமானதாக இருந்திருக்கிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. இந்த பழமையான பேனாவில் நிப் எப்படி செயல்படுகிறது, அதன் Flexibility ஆகியவற்றை ஆர்வமாக என்னிடம் விளக்கினார். எதற்காக நாம் Use and Throw என்கிற கான்செப்டிற்கு மாறினோம் என்கிற கேள்விக்கு வேறு ஒரு ஆய்வு செய்ய வேண்டும். அங்கிருந்த மை புட்டியை எடுத்துப் பார்க்கச்சொன்னார். அந்த மைபுட்டி வாங்கிப் பல வருடங்கள் இருக்கும் அதில் “specially made for manga drawing” என்கிற பொருள் வரும்படியான வாசகம் இருந்ததைக் காணும் போதே ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது ஞாபகத்தில் வந்தது.

ஓவியங்கள் குறித்த சில கட்டுரைகளுக்காக ART VS WORK OF ART, ART & WORK OF ART என வெவ்வேறு கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒன்றை அசலாக உருவாக்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் தான் அதன் உண்மையான சப்தங்கள் எழுந்து அதனை நிகழ்த்திக் காண்பிக்கின்றன. உண்மையில் கணபதி செய்து கொண்டிருந்த கிராஃபிக் நாவலுக்கான அடிப்படை செயல்பாடுகள், மேற்சொன்ன விவாதங்களின் நிகழ்த்துகலையாக அரங்கேறுவதாக உணர முடிந்தது. உண்மையில் அந்த பேனல்களில் இருக்கின்ற சில குறிப்பிட்ட ஃப்ரேம்களை அவர் தனி ஓவியமாகவும் வரையலாம், மிக முக்கியமான படைப்புகள் அவை.

இன்னும் The Story of Tamil Manga நீளும் என்றே நம்புகிறேன்…

கனவு மெய்ப்படும் கதை

1

காமிக்ஸ் புத்தகங்களில் இருக்கும் வெறி தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது. பால்ய நண்பன் சிவாவுடன் சேர்ந்து எத்தனை கற்பனைக் கதாப்பாத்திரங்கள் உருவாக்கியிருப்போம். காமிக்ஸில் வரும் ஒவ்வொரு பேனலின் சித்திரத்தையும் மனப்பாடமாக பள்ளி நண்பர்களுக்குக் கதையாகச் சொல்வேன். கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில், ஏனோ என் தந்தையும் நாராயணன் மாமாவும் எனக்காக காமிக்ஸ் புத்தகங்களை வாங்கித் தந்த காலக்கட்டம் தான் என்னை இன்றைக்கும் உந்திக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்றின் பின்புலம். ஆனால் அவர்களும் காமிக்ஸ் வாசகர்களே, அவர்களுக்கு என்னை வைத்து, அவர்களும் வாசிக்க ஒரு வாய்ப்பாக மாறுகிறது.

கிராஃபிக் நாவலாக புதிய வடிவங்களில், கதைகளில் தீவிரத்தன்மையோடு அறிமுகமாகும் போது. அது நிரப்பிய என் வெற்றிடங்கள் தான் என்னை, என் எழுத்தை ஓவியங்களிடமிருந்து எழுத்தாய் எடுத்துக்கொள்ள உதவுகிறது என்று கூட நம்புகிறேன். சொற்ப அளவிலேயே சினிமாக்கள் பார்க்கிறேன் என்றாலும், காட்சி மொழி கிராஃபிக் நாவல் வழியாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு தான் என் கதைகளிலும் PANELகளாகவே அமையுமாறு காட்சிப்படுத்த முயல்கிறேன்.

கிங் விஷ்வாவுடன் நடந்த சந்திப்பும் அதன் வாயிலாக அறிமுகமான கணபதியும் வேறு ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவார்கள் என நினைக்கவில்லை.

 

ஆனால், ட்ராட்ஸ்கி மருதுவிற்கு நான் நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறேன். அவர் தொடர்ச்சியாகக் காட்சிமொழி பற்றியும், கிராஃபிக் மொழி பற்றியும் பேசி வந்த விஷயங்களைப் பதிவு செய்து வருகின்றேன் என்கிற முறையில். கிங் விஷ்வாவுடன் சேர்ந்து யாவரும்.காம் நடத்திய கிராஃபிக் நாவல்கள் பற்றிய முதல் கூட்டத்தில், பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கும் நமக்கு கிராஃபிக் நாவல் என்கிற ஆசையையாவது விதைத்துக்கொள்ள ஒரு நியாயம் கிடைத்தது.

ஆனால் அந்த நிகழ்வுக்கு தான் எத்தனை இடர்பாடுகள் இருந்தன, கிராஃபிக் நாவல் பற்றிய புரிதல் இல்லாமல் சில நட்புகள் என்னை எச்சரிக்க, காட்சிக்கலைகளை போற்ற வேண்டிய பீடங்கள் என நம்பிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து வந்த தீவிரமான விமர்சனம். மிக அதிகமாகவே என்னை பாதித்தது. அதன் கலைத்தன்மை குறித்த கேள்விகளுக்கு அப்போது என்னிடம் பதிலில்லை. ஆனால் ட்ராட்ஸ்கி மருதுவிடம் இருந்தது.

மேற்குலக தாதாயிஸத்தின் முக்கியக் கலைஞர்கள் பற்றிய ஒரு அறிமுக உரையை நிகழ்த்திய மருது சொன்ன விஷயங்களில் புரிந்து கொண்ட DRAUGHTMANSHIP, ஆயிரக்கணக்கான ஓவியங்களை அத்தனை அற்பனிப்புடன் வருடக்கணக்காக வரைந்து கொண்டிருந்த ஓவியர்களின் கலைப்படைப்புகளைத் தெரிந்து கொண்ட இடம், என் பயணத்தை மறுவரையறை செய்தது என்பது முற்றிலும் உண்மை. அதன்பிறகு தான் ஏ கே கூமாரசாமி போன்ற அறிஞர்களின் தத்துவங்களை நான் விளங்கிக்கொள்ள ஆரம்பிக்கிறேன்.

ஆக ட்ராட்ஸ்கி மருதுவிற்கு என் தனிப்பட்ட நன்றி.

கணபதியுடனான சந்திப்பு ஓவியர் செல்லம் அவர்களின் நினைவாக நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலில் நிகழ்ந்தது. பின்னர் கிராஃபிக் நாவலுக்கான எங்கள் கூட்டத்தில் அவரும் பங்கேற்றார். அவரது ஓவியங்களைத் தொடர்ந்து பார்த்து வந்தேன், பிரமாதமான கோட்டுச் சித்திரங்களிலிருந்து அரூப ஓவியங்களுக்கு பெயர்ந்து கொண்டிருப்பதாக அவரது பயணத்தை அறிந்து கொண்டேன். அவ்வப்போது அவர் எழுதும் மற்றும் மொழிபெயர்க்கும் ஓவிய தத்துவங்கள் குறித்த பதிவுகள் மிக முக்கியமானவைகளாகப்பட்டன.

ட்ரங்குப்பெட்டிக் கதைகள் வழியாகக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக அவரது நட்பு.

அவரோடு ஒருநாள் பெசன்ட்நகரில் சந்திக்கும்போது என் புத்தகத்தை அவர் வாங்கிக்கொள்ளும் சந்திப்பாகத் தான் திட்டமிட்டிருந்தோம். காற்றாட நடந்து கடற்கரையில் அலைகளுடன் நடந்து வந்ததில் தான் தெரிந்துக்கொண்டேன், இரண்டு பேருக்கும் ஒரே WAVE-LENGTH என்று, அவரும் என்னைப் போலவே அல்லது அவரைப்போலவே நானும் சில INITIATIVEகளை நம்பியும், ஏமாந்தும் தாமாக உருவாக்கும் உத்வேகத்தில் இருப்பதையும் பரஸ்பரம் தெரிந்து கொண்டோம்.

GREATMINDS THINK ALIKEபோல இல்லை, ஆனால் உலக வரலாற்றில் ஏதோ ஒன்று புதிதாக உருவாகுவதற்கு முதன்மையான காரணம் அதன் தேவை தான். இது தான் மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க PATTERN, எங்களிருவருக்கும் தத்தம் பாதைகளில் இருக்கின்ற ஏதோ ஒரு முக்கியமான தேவை ஒன்று, என்னவென்று எங்கள் சந்திப்பின் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் நாங்கள் அதனைத் தொடங்கும் இடமென நிச்சயத்திருந்தது வேறு ஒரு இடமாக இருந்தது. ஆனால் இருவருக்குமான பாதைகளில் அதை ஆரம்பிப்பதற்கான நேரம் சற்றுத் தள்ளிப் போய்கொண்டிருக்க, கிராஃபிக் நாவல் என்கிற வேறொரு வடிவம் சாத்தியமாகியது.

யாவரும் பதிப்பகம் வாயிலாகக் கொண்டுவருவதே பெரிய விசயமென நம்பிய நான், எனது கதையே அதன் ஆரம்பமாக இருப்பது என்கிற ஆச்சரியம் இன்னுமே தீர்ந்துவிடவில்லை. அத்தனைக்கும் காரணம் கணபதியின் DEDICATION தான். கணபதியின் வீட்டிற்கு சென்றிருந்த போது மேற்கிலிருந்து கதையில் இருக்கின்ற ஒரு காட்சியை அவர் காட்சிப்படுத்தியிருந்த விதம் , அந்த விநாடிகளை இன்னும் என் மனம் சேமித்து வைத்திருக்கின்றது.

காட்சி (ட்ரங்கு பெட்டிக் கதைகள்)
காட்சி (ட்ரங்கு பெட்டிக் கதைகள்)
மேற்கிலிருந்து (ட்ரங்குப் பெட்டிக்கதைகள்)
மேற்கிலிருந்து (ட்ரங்குப் பெட்டிக்கதைகள்)

காட்சி எனும் சிறுகதை ஒரு கிராஃபிக் நாவலாகவே கொண்டு வரலாம் என்று சொன்ன மறுகணமே. Y NOT என்கிற ஆரகிள்(அசரீரீ இல்ல ஆரகிள்) இருவருக்குமே வந்திருக்க வேண்டும். செயல்பட ஆரம்பித்துவிட்டோம். இந்தப் பரிசோதனைக்குப் பின்னர் சிறந்த தமிழ் சிறுகதைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவரலாமா என்றும் யோசனை. எப்படியோ அடுத்தடுத்துப் பேசிக் கொண்டிருந்தது, இன்று ஆக்கத்திற்குள் செல்ல வைத்துவிட்டது. இங்கே வா.மணிகண்டனின் நிசப்தத்திற்கும் அதன் வாயிலாகக் கிட்டிய வரவேற்பும், பின்னர் அதுவே தமிழ் இந்துவில் கவனம் பெற்று, பல நண்பர்களின் உற்சாக வாழ்த்துகளோடும், எதிர்பார்ப்புகளோடும் எங்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது.

FUN AT WORK என்கிற ஒரு தத்துவத்தை FUNஆக எடுத்துக்கொள்ளாமல் படுசீரியஸாக எடுத்துக்கொள்பவன் நான். கணபதியும் அவ்வாறு தான் சர்வேதச அளவிலும் அவரது ஓவியங்கள் கவனம்பெற்று வரத்துவங்கியிருக்கும் காலத்தில், ஆத்ம திருப்தி என்கிற ஒற்றை லாபத்தைத் தவிர வேறு எந்த பிரதிபலனும் எதிர்பாறாத அவரது கடும் உழைப்பு COMPLIMENTARY ஆக அவரது ஓவியவெளியிலும் அடுத்த இடத்திற்கு அவரைக் கொண்டு செல்வதாக நான் அவதானிக்கிறேன்.

கோடுகளில் நெருக்கமாக ஒரு வெளியிலும், வண்ணங்களோடு விளையாடும் அரூபப் படைப்புகளோடு ஒரு வெளியிலும் என ஒரே சமயத்தில் இருவேறு வேலைகளைச் செய்துவருவது எனக்கு வியப்பாகவும், புதிய திறப்புகளையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

குறிப்பிட்ட அளவு நாம் வேலை செய்தால் போதும், அதுவே அதனை கவனித்துக் கொள்ளும் என்று சொன்னார். (அதுவே அதனை அதுவாக என்று நாங்கள் தெளிவாக மற்றவர்களைக் குழப்பக்கூடாது என்பதால் ஒரு சின்ன இல்லஸ்ட்ரேஷன்{ஆம்} கீழே – ஆனால் என்ன வில்லத்தனம் என்று கேட்கக்கூடாது)

 ALL YOU NEED IS A PUSH

If your Art = Madness **

051965a1533acc530892157a6ee65700f04235-wm

அதாவது குறிப்பிட்ட அளவு நாம் தீவிரமாக வேலை செய்தால் போதும், பின்னர் அந்த வேலையே தனக்கானதைத் தேடிக்கொள்ளும் என்கிற பொருள்படும்படியான சொல்லாடல் அது. ஆனால் அதனை மிகவும் நம்புகிறேன். வெற்றி பெற்றவர்களின் Patternகளின் ஒன்றாக இதையும் கவனிக்க முடிகிறது.

<<Push>>

அவ்வளவு தான்.

இனித்தொடரும் பதிவுகளில் கிராஃபிக் நாவல் எப்படி உருவாகிறது என்கிற கதையையும் எழுத முயற்சிக்கிறேன்.

ஜீவ கரிகாலன்

யாளி பேசுகிறது – 16 // சல்லிக்கட்டு

0

ஸேண்ட்ப்ளாஸ்ட் பண்ணப்பட்ட, தன் அருகினிலிருக்கும்  ரதியைப் பார்ப்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் யாளி  அவ்வப்போது, கையில் கிடைத்ததையும் வாசித்தும் வருகிறது. புத்தகக்கண்காட்சி அவலத்தில் ஒருவாரத்தாடியுடன் லலித்கலா சென்று வந்தவனின் புலம்பலைத் தாங்க இயலாமல் தானும் சென்று பார்த்திட துனிந்தது. கோயில் பாதுகாப்புக் குழு என்ற ஏதோ ஒரு வரலாற்று அமைப்பு பராமரிப்பு குறித்த அக்கறையோடு தங்களைப் போன்ற ஆர்வலர்களை ஊக்குவிக்கும் நந்திதா கிருஷ்ணா பற்றி பெருமை பேசிக்கொண்டிருந்தனர்.

INDOLOGY எனும் இந்தியவியல் பற்றிய படிப்பை சென்னையில் கற்பிக்கும் ஒரே நிறுவனத்தின் இயக்குனர்கள் தான், சிந்துச்சமவெளிப் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றாகத் தொடர்ந்து வரும் ஏறு தழுவுதல் எனும் தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றினை முழுவதுமாக அழிக்க, கோடிகளில் பணம் புரளும் கிண்டி ரேஸ் கோர்ஸில் சொகுசுக் கார்களை பார்க் செய்கின்ற கூட்டம் திட்டமிட்டு வருகிறது. யாளிக்கு வார்னிஷ் அடிப்பது குறித்து சர்வதேச கருத்தரங்குகள் நடத்துவதற்கு மத்திய கலாச்சார பண்பாட்டு மையத்திடம் உதவிகள் பெற்றிட தோதாக அதன் நிறுவனரே மத்திய அரசால் அந்த நிறுவனத்தின் அங்கத்தினரே இருக்கலாம் அதில் நேரடியானத் தவறு என்று ஏதுமில்லை. ஆனால் தொன்மையான கலாச்சாரத்தின் நீட்சியாகத் தொடர்ந்து வரும் ஒரு அடையாளத்தை அழிப்பதில் அவர்களுக்கு ஏன் இந்த அக்கறை.

  1. அது தமிழர்களின் அடையாளம் என்பதை மறுக்க வேண்டுமா
  2. உண்மையில் பீட்டாவோடு கைகோர்த்துக் கொண்டு விலங்குகள் நலம் என்கிற பெயரில் நடக்கும் உலகளாவிய மோசடியா

ஏற்கனவே கீழடி எனும் நாகரிகத்தின் தடையங்களை அழிக்க நினைக்கும் சிந்தனைக்குப் பின்னே ஒழிந்திருக்கின்ற அரசியல் தொலைநோக்குள்ளதாகத் தான் இருக்கிறது என்று உணர்ந்த போதும். அந்த விழுமியத்தின் நீட்சியாகத் தான் இவர்கள் முன்னெடுக்கும் ஜல்லிக்கட்டிற்கானத் தடை என்பதில் உறுதி.

ஆனால் இதற்கெல்லாம் வித்தைப் போட்டிட 2014லேயே ஆயத்தமாகிவிட்டது மத்திய அரசு ABISY எனப்படும் அகில பாரத இதிகாச சங்கலன யோஜனா எனப்படும் சங்பரிவாரின் ஒரு அங்கத்தின் உறுப்பினராக இருந்த YS ராவ் (காகத்திய பல்கலைகழகத்தில் பேராசிரியராக வேலை செய்தவர்)தான் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்ததும் மத்திய வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவராக அமர்த்தியது. அது 2014ல் மற்ற வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் அமளியையும் எதிர்ப்பையும் உருவாக்கியது. உடனேயே அவர் தன் பதவியைத் துறந்தும் அதை ஏற்காத மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதிராணியின் முயற்சியின் படி தங்களது ஒற்றை வண்ணத்தின் கீழ் ஒரு நாட்டின் கலாச்சார பண்பாட்டை மாற்றியமைக்கும் முயற்சிகள் தொடங்கின. இன்று நாம் எதிர்கொண்டிருப்பதும் அப்படியான ஒரு நிலை தான்.

உஜ்ஜைனி எனும் மூன்றாம் அடுக்கு நகரத்தைத் தேர்ந்தெடுத்து உலகத்தரமான கலைத்திருவிழாவைக் கொண்டாடுவதற்குப் பின்னர் இப்படியான திட்டமிட்ட பண்பாட்டு அழிப்பு நடந்து கொண்டிருக்கும் என்பது தான் நுண்ணரசியல். கலைக்கான கலை என கலைப் போதையில் மிதப்பவர்களுக்கு தங்கள் உல்லாசங்களும், கேளிக்கைகளும் எதனை அடகு வைத்து வாங்கப்பட்டிருக்கின்றன என்று சொல்ல இயலாது.

இப்படியான திருவிழாக்களையும், மாநாடுகளையும் அரசும் பெருநிறுவனங்களும் நடத்தும். ஆனால் மெரினா எனும் கடற்கரையினையே தூரிகையாக்கி வெவ்வேறு போராட்ட வடிவங்களில் கலையுணர்வோடு மக்களுக்காகப் பிரச்சாரம் செய்த பணத்தைத் தேடியலையாத மாபெரும் ஒன்றுகூடலை வரலாற்றில் பதித்த ஓவியர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும், பாடகர்களுக்கும், நடனமாடியவர்களுக்கும், கலாபூர்வமாக ஒருங்கிணைத்தவர்களுக்கும் இந்தச் சமூகம் நிறைய கடமைப்பட்டிருக்கிறது. ஆழ்மனதில் நல்லெண்ணத்தின் விளைவாய் அதைத் தங்கள் கலையுணர்வால் மக்களுக்கு கடத்தியமையாலும் மிகப்பெரிய அளவில் தொழிற்நுட்பத்தோடு ஒருங்கிணைத்தமையாலும் தான் மாபெரும் வரலாறு சாத்தியமானது.

நாம் தோற்கவில்லை ஜெயித்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் பண்பாட்டை அழிப்பதற்கு நம்மை பயமுறுத்தி வீழ்த்துவதும், குழப்பிவிட்டு சாதிப்பதும் அவர்களது திட்டமாக இருக்கும், அதற்காகவே நிறைய துரோகிகள் நம்முடன் திரிவதும் யதார்த்தமான உண்மை.

யாளி தன்னை உயிர்ப்புடன் இருப்பதாகச் சொல்பவர்களைப் பார்த்து கேள்வி கேட்கிறது ? நீங்கள் அழிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அறிவீர்களா?

– ஜீவ கரிகாலன்

சமகாலக்கலைக்கான அரிதான முன்னெடுப்பு

0

தென்னிந்திய கலைக் கண்காட்சி 2016 (பதிவு)

ஜீவ கரிகாலன்

சென்னையில் ஓவியக்கலை சார்ந்து நடக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்த சந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் தென்னிந்திய கலைக் கண்காட்சி அமைந்தது. இந்த வருடம் சென்னை லலித்கலா அகாதமியில் டிசம்பர் 14 முதல் 18 வரை நடைபெற்றது

சந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் எனும் அமைப்பு 2012ல் தொடங்கப்பட்டது. 2013ல் இந்த அமைப்பின் முதல் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது, 2016 – நான்காவது காட்சியாக நடைபெற்றது. அதன் தொடக்க நாளான அன்று, நிகழ்வை ஏவி இளங்கோவுடன் மூத்தக் கலைஞரான சேனாதிபதியும் பங்குபெற்றார். அவர்களுடன் ஓவியர்களான விஷ்வம், கலை இயக்குனர் ஜே.கே, ஃபோரம் கேலரியின் க்யூரேட்டர் ஷாலினி ஆகியோர் உடனிருந்தனர்.

ஓவியர் ஏவி இளங்கோ, சென்னையில் வசிக்கும் முக்கியக் கலைஞர்களில் ஒருவர். ராஜிவ்காந்தி சாலையின் ஆரம்பத்தில் மத்திய கைலாஷம் கோயிலின் பின் அமைந்திருக்கும் ஐந்திணை எனும் சிற்பத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் நான் அவரை நினைத்துக் கொள்வேன். சென்னையில் இது போன்ற நிகழ்வைக் காண்பது மிக அரிதான ஒன்று என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

தன் கலைப்பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்து வந்த தன் மனைவியான சந்திரா இளங்கோ அவர்களின் நினைவாக ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் வாயிலாக இளம் படைப்பாளிக்கும், வளரும் படைப்பாளிகளுக்கும் ஊக்கம் கொடுத்த, புதிய பாதைக்கான நம்பிக்கைகளை உருவாக்கி, அவர்கள் பயணத்திற்கான வழிகாட்டியாக இந்த அறக்கட்டளையினை அவர் முன்னெடுப்பதாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

வர்தா புயலின் காரணமாக திசம்பர் 12ல் தொடங்க வேண்டிய இந்நிகழ்வு இரண்டு நாட்கள் தாமதமாக திசம்பர் 14ல் தொடங்கியது. தொடக்க நாளன்று அறக்கட்டளையின் சார்பாக அந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட கலைஞர்களுக்கும், காட்சிக்கு வைக்கப்பட்ட படைப்புகளில் சிறப்பெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கும் பரிசும் விருதும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த படைப்பாக்கம் மற்றும் செயல்திறனுக்கான சந்திரா இளங்கோ ஃபவுண்டேசனின் கோப்பை கும்பகோணத்தைச் சேர்ந்த கலைஞரான அந்தோனிராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரது போர்ட்ரெயிட்டிற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரின் ஓவியம் பற்றி சென்ற பகுதியில் பேசியிருக்கிறோம்.

இந்தக் கண்காட்சியில் படைப்புகளை மட்டும் காட்சிக்கு வைக்காமல், சொற்பொழிவு(lecture), விவாதம், நிகழ்த்துக்கலை என்றெல்லாம் பன்முகத்தன்மையோடு அமைகின்றது. டிசம்பர் 14 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு நவீன ஓவியர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள், இளம்படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் என ஒன்றாக அரங்கேற்றியிருப்பது இக்கண்காட்சியின் மற்றொரு சிறப்பு.

விருதுபெற்ற அந்தோனிராஜின் படைப்புகளைப் போல இளம் படைப்பாளிகளான விஜய் பிச்சுமணி, முருகன் தங்கராஜ் உட்பட மூத்த படைப்பாளிகளான செழியன் (ஓவியம், சிற்பம்), நரேந்திரபாபு, ஜி.பிரபு, கணபதி சுப்ரமணியம் போன்ற பலரது படைப்புகளை பார்க்க முடிந்தது. ஓவியர் விஷ்வம் 16 டிசம்பர் வெள்ளிக்கிழமை அன்று நிகழ்த்துக்கலையாக தன் படைப்பை அரங்கில் வைத்து உருவாக்கிக் காட்டினார். பீதாம்பர் போல்சானி எனும் கலை விமர்சகரின் சொற்பொழுவு “சமகாலக்கலை” எனும் தலைப்பில் நிகழ்ந்தது.

இவற்றை தலைமையேற்று முன்னின்று நடத்தும் ஏவி இளங்கோ தன் அமைப்பிற்கு உறுதுனையாக இருக்கும் மூத்தக் கலைஞர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றிட்கு நன்றி தெரிவித்தார். அறக்கட்டளை வாயிலாகப் புதிய/இளம் கலைஞர்களுக்கு களங்களை அமைத்துத் தர சில அமைப்புகளோடு செய்து வரும் ஒப்பந்தங்களுக்கான முயற்சிகளும் அதன் விளைவாகக் கிட்டிய சில பலன்களையும் பகிர்ந்துக் கொண்டார். கொச்சின் கலைத் திருவிழாவில் (COCHIN ART BIENNIELE) பங்கு பெற அமைப்பு வாயிலாகச் செல்லவிருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து பிற ஊர்களில் அமைப்பு சார்பாக கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் பதிவு செய்தார்.

கலைத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஓவியர்களையும், கவிஞர்களையும் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் ஸ்பான்சர் செய்வது அவசியம். அதுவே ஒரு ஆரோக்கியமான சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியாக அவர் பேசியதன் சாரம்சமாக இருந்தது.

பொதுவாக கலைஞர்களைப் பாதுகாப்பதும், அவர்கள் தங்களது கலை வழி சமூகத்திற்காக பங்களிப்பதற்கு வசதிகள் செய்வது, அங்கீகரித்து ஊக்குவிப்பது போன்ற பணிகளை வளர்ச்சிக்கான பாதையை நோக்கும், ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்பும் அரசாங்கங்கள் மேற்கொள்ளும் பணிகள். ஆனாலும் இந்தியக் கலை வரலாற்றில் இது போன்ற பணிகளை தனிநபரின் முன்னெடுப்பால் உருவான இயக்கங்கள் தான் சாதித்து வந்திருக்கின்றன. ஓவிய உலகில் சுதேசிய ஓவியங்கள் ஒருபுறமிருக்க உலக அளவிலான சிந்தனைமுறைக்கு ஏற்ப உருவான முற்போக்கு ஓவியக் குழுக்களாகட்டும் அல்லது கே.எஸ்.பணிக்கர் உருவாக்கிய சோழமண்டலம், விவான் சுந்தரம் உருவாக்கிய PLACE FOR PEOPLE அமைப்பு, ஜே.ஸ்வாமிநாதனின் பெரும் உழைப்பில் உருவெடுத்த மத்திய இந்தியாவை கலைக்கான கேந்திரமாக்கிய போபாலின் பாரத் பவன் ஆகட்டும் தனிநபரின் முன்னெடுப்பில் உருவானவையே. மேற்சொன்ன எல்லாவற்றிட்கும் ஒரு சாதாரணத் தொடக்கம் தான் இருந்து வந்தது.

இந்த அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி கூட அப்படியான ஒரு தொடக்கத்தைத் தருமென்றால் தமிழகத்தில் வரப்போகும் தசாப்தம் புதிய உத்வேகம் கொண்ட கலைச்சூழலுக்கான சாத்தியங்களுக்கு வழிவகுக்கும்.

15590722_739306166218233_984635130500425349_o (1)15493736_739305966218253_7059652943900306086_o (1)